search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னமராவதி கலவரம்"

    பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கு
    இடையே கடந்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 
     
    அப்போது கலைந்துசென்ற நபர்கள் திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்நிலையில், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் செல்வகுமாரை அங்கிருந்து வரவழைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். #PonnamaravathiViolence
    ×